பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வந்த இளம் தம்பதியரின் அன்பை வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கணவர் தனது மனைவியை கைகளில் தூக்கியபடி பழனி மலைக்கோயில் படிப்பாதையில் சிரித்த முகத்துடன் ஏறிச் செல்கிறார். மனைவியும் கணவரை அணைத்தபடி மகிழ்ச்சியுடன் பயணிக்கும் இந்த காட்சி பக்தர்களையும் நெட்டிசன்களையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.