திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு தலைமை மருத்துவமனையின் முக்கிய நுழைவாயில் கட்டும் பணி சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இதனால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மாற்றுப் பாதை வழியாகச் செல்ல வேண்டியிருந்தது. தற்போது, இந்த முக்கிய நுழைவாயில் கட்டும் பணி முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.