அந்த லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு வந்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். விசாரணையில், கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை தூத்துக்குடியில் உள்ள ஆலைக்கு ஒரு வித எண்ணெய் தயாரிப்பதற்கு கொண்டு செல்வதாக டிரைவர் தெரிவித்தார்.
உடனே அந்த லாரியை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் மீன் கழிவுகள் இருப்பதும், அதனால் துர்நாற்றம் வீசியதும் தெரியவந்தது. இதற்கிடையே கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி வழியாக லாரியில் கொண்டு செல்வதாக தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.