திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பழனிக்கு வந்துள்ளார். பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷை, கோயில் இணை ஆணையர் மாரிமுத்து வரவேற்று பிரசாதங்கள் வழங்கினார். அமைச்சர் வருகையால் பள்ளி விழாவுக்கு சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது.