திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் கொடைக்கானல் வனப்பகுதியில் சாதாரண வகை குரங்குகள், லங்கூர் இன குரங்குகள் அதிகம் உள்ளன. குரங்குகளுக்கு சுற்றுலாப் பயணிகள் பழங்கள், பிஸ்கட் சாப்பிட வழங்குகின்றனர். இதனால் தமக்கான உணவைத் தேடி உண்ணும் பழக்கத்தை குரங்குகள் மறந்து விடுகின்றன. எனவே குரங்குகளுக்கு உணவு வழங்கக் கூடாது. மேலும் பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசக்கூடாது என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.