திண்டுக்கல் மேற்கு மாவட்டம் பழனி வடக்கு ஒன்றியத்தில் ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் எஸ். கார்த்திக் ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனி என். பாலன், ஒன்றிய கழகச் செயலாளர் கில்லி முத்து ஆகியோர் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பயனடைந்தனர்.