பழனியில் வாழைப்பழ விலை உயர்வால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி பகுதியிலிருந்து வாங்கப்படும் வாழைப்பழம், கடும் வெயில் காரணமாக விளைச்சல் குறைந்ததால் ஒரு டன் 18,000 ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில், தற்போது 25,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாழைப்பழ விலை உயர்ந்தாலும், பழங்கள் நோட்டமில்லாததால் விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.