பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளுக்காக பைபாஸ் சாலையோர 58 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. நில உரிமையாளர்கள் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே சட்டப்பூர்வமாக நிலம் கையகப்படுத்தப்படுவதாக விளக்கமளித்தார்.