பழனி: நடுவழியில் நின்ற அரசு பஸ் - தவித்த பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளைகவுண்டன் வலசு செல்லும் 19ஆம் நம்பர் அரசுப் பேருந்து நேற்று மதியம் 1 மணியளவில் புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்து வேல் ரவுண்டானா, காந்தி மார்க்கெட் நால்ரோடு அருகே சென்றபோது, திடீரென இன்ஜின் கோளாறு காரணமாக பழுதாகி பாதி வழியில் நின்றது. இதனால் பேருந்தில் பயணம் செய்த முப்பதுக்கும் மேற்பட்டோர் அவதி அடைந்தனர்.

வெள்ளைய கவுண்டன் வலசு, கீரனூர் ஆகிய வழித்தடத்தில் செல்லக்கூடிய அரசு பேருந்துகளில் இதுவும் ஒன்று. இந்தப் பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பேருந்துகள் செல்லும் என்பதால் அப்பகுதிக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

பழனி பகுதியில் அரசுப் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நிற்பதும், முன் சக்கரங்கள் கழன்று ஓடுவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அரசு பேருந்துகளில் முறையான பராமரிப்பு பணிகள் அவ்வபோது மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி