திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை நடைபெறுவதாக டிஎஸ்பிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், ஆய்வாளர் மணிமாறன் உத்தரவின் பேரில், சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையிலான போலீசார் கல்லூரி பகுதிகளை ரோந்து சென்றனர். ரோந்து பணியின் போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 4 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைதான நபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.