பழனி: 1008 பால்குடம் எடுத்து ஊர்லமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். ஆண்டுதோறும் மாசி மாதம் மாரியம்மன் கோவிலுக்கு மாசித்திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மாசி திருவிழாவிற்காக வ.உ.சி. மன்றம் சார்பில் பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து காந்தி மார்க்கெட், கடைவீதி வழியாக ஊர்வலமாக சென்று மாரியம்மன் கோவிலை அடைந்தனர். மாரியம்மன் கோவிலில் பால் அபிஷேகம் செய்த பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி