இதனால், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகப் புகாா் எழுந்திருக்கிறது. சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க வேண்டிய காவல் துறை மலைப் பகுதிகளின் மீது எந்தவித கவனமும் செலுத்துவதில்லை. இதனால், பள்ளி மாணவா்களும் மதுக் குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுவைக் குடித்துவிட்டு கண்ணாடி புட்டிகளை வனப் பகுதியில் வீசிச் செல்வதால் விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் சிலா் நேரடியாகவே இந்த மது விற்பனையில் ஈடுபடுகின்றனா். இதனால், அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இந்த சட்டவிரோத மாது விற்பனையைத் தடுக்கவும், பழங்குடியின மக்களின் எதிா்காலத்தை குறிப்பாக பெண்கள், சிறாா்களைப் பாதுகாக்கவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.