திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 21,419 மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் செ. சரவணன் காணொலிக்காட்சி வாயிலாக கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் மாவட்ட எஸ்பி பிரதீப் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தேர்வு குறித்த ஆலோசனைகளையும் வாழ்த்துகளையும் வழங்கினர்.