இந்த நிலையில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தாலும், நத்தம், திண்டுக்கல், பழனி பகுதிகளில் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதாலும் எலுமிச்சைகளின் தேவை அதிகரித்துள்ளது. தற்போது திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் எலுமிச்சை விளைச்சலும் குறைந்திருக்கிறது.
இதனால், ஆந்திர மாநிலத்திலிருந்து திண்டுக்கல் சந்தைக்கு எலுமிச்சை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வரத்து குறைந்து தேவை அதிகரித்திருப்பதால், எலுமிச்சை விலை கிலோவுக்கு ரூ. 30 வரை அதிகரித்தது. 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை எலுமிச்சை விலை ரூ. 2, 500-லிருந்து ரூ. 4 ஆயிரமாக உயா்ந்தது.