திண்டுக்கல் நகரில் வருடம்தோறும் புளி சந்தை நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொட்டை எடுக்காத புளி 1கிலோ 50 ரூபாய்க்கும், கொட்டை எடுத்த புளி ரூ. 80 முதல் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது போதிய விளைச்சல் இல்லாததாலும், வரத்து குறைவாக இருப்பதாலும், அதன் விலையும் உயர்ந்துள்ளது.
ஒட்டன்சத்திரம் சந்தையில் பழனி ஒட்டன்சத்திரம் பாச்சலூர் நத்தம் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட புளி விற்பனை செய்யப்பட்டது அதன்படி கொட்டை எடுக்காத புளி ரூ. 70க்கும், கொட்டை எடுத்த புளி ரூ. 150க்கும் விற்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் புளி விளைச்சல் குறைந்துள்ளது.
மேலும் புளியில் நோய் தாக்கப்பட்டுள்ளதால் வரத்தும் குறைவாக உள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ. 80 முதல் 120 ரூபாய்க்கு விற்ற புளி இந்த ஆண்டு 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிலோ ஆயிரம் ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்பனையாகக் கூறுகின்றனர்.