அதனைத்தொடர்ந்து, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திருமலைச்சாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் (பழனி) பரிமளா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரிட்டோ, ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், வட்டாட்சியர் சஞ்சைகாந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.