ஒட்டன்சத்திரம்: கல்லூரி மாணவர்கள் ட்ரோன் செயல்முறை விளக்கம்

கிராமப்புற பணி அனுபவத் திட்டம் மூலம் ட்ரோன் தொழில்நுட்பத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் அறிவியல் நிலைய இறுதியாண்டு மாணவர்கள் சூர்யா, சூர்யா, சூர்யா, சுதர்சன், தங்கதுரை, சந்திப், வீரபாண்டியோகேஷ்குமார் மற்றும் யோகேஷ்ராம் ஆகிய இறுதி ஆண்டு மாணவர்கள் ட்ரோன் தொழில்நுட்பத்தை பற்றி விவசாயிகளுக்கு விளக்கிக் காட்டினார்கள். 

மேலும் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் முனைவர் நிர்மலா அவர்கள் வழிகாட்டுதலின்படி திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில் உள்ள தாதாங்கொட்டை, கேபுதுக்கோட்டை, சுக்காம்பட்டி போன்ற கிராமங்களில் காய்கறிப் பயிர்களில் ட்ரோன் மூலம் பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு மருந்துகள் தெளிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி செயல்விளக்கத்துடன் விளக்கிக் கூறினார்கள். பயிர்களுக்குத் தெளிக்கும் நேரம் குறைவதுடன் மருந்துத் தெளிக்க ஆட்களுக்குக் கொடுக்கும் ஊதிய செலவும் குறைகிறது. 

மேலும் வட்டார வேளாண்மை அலுவலர் திரு. கார்த்திக் அவர்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டார்கள். மேலும் சுப்பிரமணி, சரவணக்குமார், மற்றும் தம்பிதுரை ஆகியோரது விவசாய நிலங்களில் வெங்காயம், சுரைக்காய், தக்காளி மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் பூச்சி மருந்துத் தெளிப்பு செயல்விளக்கம் செய்துகாட்டினார்கள்.

தொடர்புடைய செய்தி