திண்டுக்கல் கோதைமங்கலம் ரயில்வே கேட் அருகே இரவு நேரத்தில் பட்டாக்கத்தியை கையில் வைத்துக்கொண்டு இளைஞர் ஒருவர் சுற்றித் தெரிந்துள்ளார். இளைஞர் கத்தியுடன் இருப்பதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். வீடியோவை பார்த்த தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து இளைஞர் கோகுல் ராஜை கைது செய்தனர். பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.