நிலக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

நிலக்கோட்டை அருகே கட்டிட தொழிலாளி சுரேஷ்(26) வீட்டில் சென்ட்ரிங் மரப்பலகைகளை எடுத்துக் கொண்டிருந்தபோது, மழையில் நனைந்த மரப்பலகை மேலிருந்த மின்கம்பியை உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி