திண்டுக்கல்: காதலித்த பெண்ணின் தந்தையால் தாக்கப்பட்ட இளைஞர் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த 23 வயது கூலித் தொழிலாளி ராஜதுரை, காதலித்த பெண்ணின் தந்தையால் தாக்கப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக விளாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு, உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, உடலைப் பெற்றுச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி