மேலும், இந்த வழியில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் பெரும் அச்சத்துடன் சென்று வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட வத்தலகுண்டு காவல் நிலையத்தில் கிராம பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்று, சாக்கு பையில் வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ஆவேசமாக சாலையில் போட்டு உடைத்தனர். மேலும், அந்த சாலையில் மரங்களைப் போட்டு மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்
ஜெயிலுக்குள் கஞ்சா விற்பனை செய்த சிறை காவலர் சஸ்பெண்ட்