இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் உயர் அழுத்த மின்மாற்றி அமைக்கப்பட்டது. மின் கம்பங்கள் உண்டுபட்டு மின்மாற்றி உள்ளிட்ட அனைத்து சாதனங்களும் பொருத்தப்பட்ட நிலையில் திடீரென ஏற்பட்ட தடங்கல் காரணமாக மின்மாற்றிக்கு மின் இணைப்பு வழங்காமல் மின்வாரியத் துறையினர் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று நினைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. தற்போது வெறும் மின்கம்பம் மட்டுமே காட்சி பொருளாக இருக்கும் நிலையில் தங்கள் பகுதி மின்சார பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்