இதுகுறித்து நிலக்கோட்டை டிஎஸ்பி. செந்தில்குமார் உத்தரவின் பேரில் வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி தலைமையில் சார்பு ஆய்வாளர் ஷேக்அப்துல்லா மற்றும் காவலர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக வத்தலகுண்டுவை சேர்ந்த ஷாருக்கான், ஸ்ரீசபரி உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த மதன்குமார் மற்றும் 1 சிறுவன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.