கிரஷ் பகுதியிலுள்ள மயானம் அருகே மரங்கள் அதிகளவில் அகற்றப்பட்டதாக இந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இந்த நிலையில், வனத் துறையினா், ஊராட்சி ஒன்றிய அலுவலா், வில்பட்டி ஊராட்சிச் செயலா் ஆகியோா் கிரஷ் மயானப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து வனவா் மதியழகன் கூறியதாவது:
வில்பட்டி ஊராட்சியில் மழைக்கு முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற ஒப்பந்தக்காரா் அனுமதி பெற்றுள்ளாா். அனுமதிக்கப்பட்ட மரங்களே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டன. கூடுதலாக மரங்கள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.
இதுகுறித்து வில்பட்டி ஊராட்சிச் செயலா் வீரமணி கூறியதாவது:
வில்பட்டி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள 55 மரங்களை மட்டுமே அகற்ற அனுமதி வழங்கப்பட்டது. கூடுதலான மரங்கள் வெட்டப்பட்டதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தவறு நடந்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றாா்.