வத்தலக்குண்டு: சட்டவிரோதமாக மது விற்பனை; திமுக நிா்வாகி கைது

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள கோம்பைபட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வந்தது. இதுகுறித்து வத்தலகுண்டு காவல் நிலையத்தில் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். 

ஆனால், நடவடிக்கை எடுக்காததால், இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்ற இடத்துக்குச் சென்று, சாக்குப் பையில் வைத்திருந்த மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து சாலையில் போட்டு உடைத்தனர். 

இதுகுறித்து தகவலறிந்து சென்ற வத்தலகுண்டு போலீசாரிடம் கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த கே. உச்சப்பட்டியைச் சேர்ந்த திமுக நிர்வாகி சிவமணியை (41) போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி