ஆனால், நடவடிக்கை எடுக்காததால், இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்ற இடத்துக்குச் சென்று, சாக்குப் பையில் வைத்திருந்த மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து சாலையில் போட்டு உடைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற வத்தலகுண்டு போலீசாரிடம் கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த கே. உச்சப்பட்டியைச் சேர்ந்த திமுக நிர்வாகி சிவமணியை (41) போலீசார் கைது செய்தனர்.