மேலும் இவர்களுடன் வனத்துறை அதிகாரிகளும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர். மேலும் இதனால் கொடைக்கானல் முதல் பழனி வரையுள்ள மலைச்சாலையில் சிறிது அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானலில் சில மாதங்களாக பனிப்பொழிவு அதிகமாகவும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், மழை இல்லாததாலும் இதுபோன்று காட்டுத்தீகள் அதிகமாக பரவுவதற்கு நேரிடும். இதனால் வனத்துறையினர் காட்டுத்தீ ஏற்படாத வகையில் அகழிகள் ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்