சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். ஆண்கள் இரட்டையர் பிரிவு, பெண்கள் இரட்டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாம் மேலாளர் காதர் பரிசுகளை வழங்கினார். சுற்றுலா உதவி அலுவலர் சுதா நன்றி கூறினார்.
திட்டமிடப்படாத படகுப் போட்டி: கோடை விழா தொடங்கியதிலிருந்தே தினமும் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்ததால் நட்சத்திர ஏரியில் படகுப் போட்டியும், படகு அலங்காரப் போட்டிகளும் நடைபெறவில்லை. இந்த நிலையில், மழை பெய்யாததால் முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென பிற்பகலில் படகுப் போட்டி நடைபெற்றது. இதனால், போட்டியில் பொதுமக்கள் சிலரே கலந்து கொண்டனர்.