சுற்றுலாத் தலமான கொடைக்கானல் மலையில் 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மருத்துவ சிகிச்சைக்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனையைத்தான் நம்பி உள்ளனர். மருத்துவர் பற்றாக்குறையால் சில முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் இதர மருத்துவ சேவைகளுக்கு மக்களை வத்தலகுண்டு அல்லது திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர். பரிந்துரைகள் அதிகரிப்பதால் ஏழை, நடுத்தர நோயாளிகள் மலையிலிருந்து தரைப் பகுதியான வத்தலகுண்டு அல்லது பழநிக்கு அலைக்கழிக்கப்படுவதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?