இந்நிலையில் கடந்த வாரம் கொடைக்கானலுக்கு ஆய்வு மேற்கொள்ள வந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள 12 தண்ணீர் ஏடிஎம் இயங்குவதாக கூறினார். மேலும் 10 இடங்களில் வைக்கப்போவதாக கூறியுள்ளார். இந்நிலையில் கொடைக்கானலில் வைக்கப்பட்டுள்ள 12 இடங்களில் உள்ள தண்ணீர் ஏடிஎம் இயங்காமல் இருக்கிறது. இதைக்குறித்து கொடைக்கானல் சமூக ஆர்வலர் கூறுகையில் தண்ணீர் ஏடிஎம் வைப்பது வரவேற்கத்தக்கது ஆனால் இதற்கு முன்னால் வைத்த தண்ணீர் ஏடிஎம் ஏதும் இயங்காமல் இருக்கிறது என குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் வைக்க இருக்கும் தண்ணீர் ஏடிஎம் தரமாக பராமரித்து, இதற்கு முன் வைத்துள்ள தண்ணீர் ஏடிஎம்களை சீர் செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!