கொடைக்கானல்: சுற்றுலா பயணிகள் மீது கொலைவெறி தாக்குதல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு மதுரையிலிருந்து சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் மீது மூஞ்சிக்கல் பகுதியில் இயங்கி வரும் புகாரி உணவகத்தில் உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு மீன், கோழி போன்ற உணவுகளை ஆர்டர் செய்த போது மீன் மற்றும் கோழி கெட்டுப்போவதை அறிந்து வாங்கிய உணவுகள் வேண்டாம் என்று கூறியதற்கு உணவுகடை உரிமையாளர்கள் திரும்பி வாங்க முடியாது என்று கூறியுள்ளனர். 

மேலும் உணவு அருந்த சென்றவருக்கும் கடை உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது அக்கடை உரிமையாளர்கள் அப்பகுதியில் உள்ள அனைவரும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஒன்றுதிரண்டு உணவு அருந்த வந்தவர்களை கொலைவெறிதாக்கியுள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்கள் அங்கிருந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில் கடை உரிமையாளர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கும் வந்து அவர்களை கடுமையாக தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். 

மேலும் சம்பவம் அறிந்த கொடைக்கானல் காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளிகள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடையில் வேலை செய்த மூன்று நபர்களை கைது செய்துள்ளனர். மீதமுள்ள நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி