மேலும், காற்றுடன் மிதமான மழை பெய்தது. அப்சர்வேட்டரி, செண்பகனூர், பெருமாள் மலை, வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூர், குண்டுபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. கொடைக்கானல் பூம்பாறை- கிளாவரை செல்லும் மலைச் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே மரம் சாய்ந்து விழுந்தது. இதனால், சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு நெடுஞ்சாலை, வனத் துறையினர் சென்று சாலையில் விழுந்த 2 மரங்களை அகற்றினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது.
மேக்ஸ்வெல்லின் மோசமான IPL சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா