திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகிறார்கள். இந்நிலையில் திண்டுக்கல் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு சுதாகர் என்பவர் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் கொடைக்கானல் ஏரிக்குச் சென்று இரவு உணவு அருந்தி விட்டு தங்கும் விடுதிக்குச் சென்றுள்ளனர். இதில் வாகன ஓட்டியான சுதாகர் சரிவான மலைச்சாலையில், முன் அனுபவம் இல்லாமல் இயக்கியுள்ளார்.
அப்போது உகார்தே நகர் பகுதியில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற etious வாகனத்தின் மீது மோதி அருகே இருந்த வாய்க்காலில் வாகனத்தை இறக்கியுள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக முன்னே சென்ற வாகனத்தில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.