கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: ஆண்டுதோறும் தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறை சார்பில் மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், நிகழாண்டிலும் மலர்க் கண்காட்சி விரைவில் நடத்தப்படவுள்ளது. பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சால்வியா, டெலிபினியம், ஜெனியா, பிங்கோஸ்டர், பென்ஸ்டீமன், வொபினா போன்ற மலர்ச் செடிகள் கடந்த நவம்பர் மாதம் முதல்கட்டமாக நடவு செய்யப்பட்டன.மலர்க் கண்காட்சியில் மயில், திண்டுக்கல் பூட்டு, மலைப்பூண்டு, கொய்யா கனி, செல்பி பாயிண்ட், பூனை, பூமரம் போன்ற மலர்களான உருவ அமைப்புகள் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காய் கனிகளால் உருவாக்கப்படும் யானை, மர அணில், கருப்பு, ஆரஞ்சுப்ளை கேட்சர், சிறுத்தை, பஞ்சவர்ணகிளி ஆகியவையும் மலர்க் கண்காட்சியில் வடிவமைக்கப்பட உள்ளது என்றார்.
தவெக நிர்வாகி மீண்டும் மாமூல் வேட்டை.. நயினார் நாகேந்திரன் கண்டனம்