திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த தூய்மைப் பணியாளர்களை தடுத்து நிறுத்திய நகராட்சி உளியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் கொட்டும் மழையிலும் தங்களது கடமையை பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பல வருடங்களாக இதுபோன்று ஒப்பந்தக்காரர்கள் முறையாக சம்பளம் வழங்காததால் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் புதிதாக பதவி ஏற்ற மாவட்ட ஆட்சியர் முறையான ஊதியம் கொடைக்கானல் நகராட்சியால் வழங்கப்படவில்லை என்று இன்று கொடைக்கானல் ஆய்வுக்கு வந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களிடம் மனு அளித்தனர்.