இந்த நிலையில், பூலத்தூர் வனப்பகுதியிலிருந்து தினந்தோறும் இரவு நேரங்களில் வெளியேறும் வன விலங்குகள் இந்த விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதுகுறித்து விவசாயி கோபி கூறியதாவது: இந்தப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் வன விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து வத்தலகுண்டு வனத் துறையிடம் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விவசாயத் தோட்டங்களையும், விவசாயிகளின் உயிர்களையும் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு