கூத்தம்பட்டி சொத்து பிரச்சனை: ஒருவர் அடித்துக் கொலை

கூத்தம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி தர்மராஜ் 50. இவருக்கும் சகோதரர் வெள்ளைச்சாமி 46, இடையே சொத்து பாகப்பிரிவினை நடந்தது. நேற்று தோட்டத்து சாலையில் இருந்த தகர கூரையை எடுக்க சென்ற போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி தள்ளுமுள்ளு ஏற்பட வெள்ளைச்சாமி ஆதரவாளர்களுடன் சேர்ந்து தர்மராஜை தென்னை மட்டைகளால் தாக்கினார். மயங்கிய தர்மராஜ் உயிரிழந்தார் செம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி