திண்டுக்கல்: அதிக அளவில் மின்சாரம்.. கருகிய ஃப்ரிட்ஜ்

திண்டுக்கல் மாவட்டம் விட்டல் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் நாகேந்திரன். வேடசந்தூர் வேளாண்மை துறை அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இவரது வீட்டிற்கு வரும் மின்சாரம் திடீரென அதிக அளவில் வந்ததால் வீட்டில் இருந்த பிரிட்ஜ்,  செல்போன் சார்ஜர். பல்பு வயர்கள் கருகியது

ஃபேனுக்குச் செல்லும் வயரும் கருகியது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட நாகேந்திரன் டிவி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற அனைத்து மின் சாதனங்களையும் பிளக்குகளை பிடுங்கி வைத்து விட்டார். இதேபோல் அவரது அருகில் இருந்த ஒரு சிலரின் வீடுகளிலும் இதே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

மின்வாரிய அதிகாரிகள் சுக்காம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து வரும் மின்சாரத்தை சரியான அளவு வருமாறு கட்டுப்படுத்த வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி