திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வருவோரின் வசதிக்காக நிறுவப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம், சில வாரங்களிலேயே பழுது காரணமாக முடங்கியுள்ளது. இதனால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் குடிநீர் இன்றி அவதிக்குள்ளாகின்றனர். இயந்திரம் சரி செய்யப்படாததால், அது தற்போது காட்சிப் பொருளாக மாறிவிட்டதாகப் புகார் அளிப்போர் தெரிவிக்கின்றனர்.