கடந்த 12 வருடங்களாக தென்காசி பகுதியில் திருநங்கைகளோடு வசித்து வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் அமர்நாத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மணிகண்டனின் வீடியோவை பார்த்துவிட்டு அமர்நாத்திடம் இது பற்றி கேட்டுள்ளனர். உறவினர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அமர்நாத் மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் மணிகண்டன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நத்தம் பகுதியில் நடந்த ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அப்போது தனது தாய் தந்தையுடன் சேர்த்து வைப்பதாக கூறி நண்பர்களுடன் அழைத்துச் சென்ற அமர்நாத் நத்தம் பகுதியில் இருந்த ஒரு காட்டுப் பகுதிக்குச் சென்றபோது திடீரென மணிகண்டனை அறிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அமர்நாத் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். மணிகண்டனை திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.