நாங்கள் 800 வருடமாக பாதுகாத்து வரும் வீரகோவில் பகுதியை பொதுமக்களே பாதுகாத்து கொள்கின்றோம் எனவும் அரசின் இந்த உத்தரவு தங்களுக்கு தேவையில்லை என கூறி வந்தனர். இந்த நிலையில் நத்தம் பேருந்து நிலையம் முன்பு தமிழர் தேசம் கட்சி சார்பில் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து அரசின் பாரம்பரிய பல்லுயிர் பாதுகாப்பு தலம் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், ஊர் மக்களிடம் கருத்துகளை கேட்காமல் அறிவிப்பு செய்தது ஏன் என கூறி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காசம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் சாரை சாரையாக வாகனங்கள் மூலம் கலந்து கொண்டனர். தமிழர் தேசம் கட்சியின் தலைவர் கே.கே. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முழக்கமிட்டனர். இந்த திட்டத்தை அரசு கைவிடவில்லை என்றால் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரேசன் அட்டைகளை ஒப்படைத்து போராட்டம் நடத்துவோம் என்றனர்.