இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நத்தம் ஆட்டுச்சந்தையில் வியாபாரம் களைகட்டியது. ஆட்டுச்சந்தையில் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் குவிந்தன. இதில் மதுரை, திருச்சி, சிவகங்கை, தேனி, திருப்பூர், தஞ்சாவூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆட்டு வியாபாரிகள் லாரி லாரியாக ஆடுகளை கொண்டு வந்திருந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு துவங்கி சந்தையில் 7 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை எடைக்கு தகுந்தாற்போல் ஆயிரக்கணக்கான ஆடுகளின் விற்பனை நடந்தது. வழக்கத்திற்கு மாறாக ஆடுகள் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று ஒரே நாளில் நத்தம் வாரச்சந்தையில் 1 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது. இது ஆடு வளர்க்கும் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
WATCH: சர்ஜரியில் குறுக்கிட்ட நிலநடுக்கம்.. கடமையில் செவிலியர்கள்