நேற்று காலையில் அம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு பல்வேறு வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் காமாட்சி அலங்காரத்தில் அம்மன் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் விடிய விடிய நகர்வலம் வந்தார். இதில் வழிநெடுகிலும் பக்தர்கள் ஆங்காங்கே மண்டபங்களில் நின்று தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களை நேர்த்திக்கடன்களை பெற்றுக்கொண்ட மாரியம்மன் கோவிலுக்கு சென்று அங்கு இருப்பிடம் போய்ச் சேர்ந்தது. இத்துடன் இந்த ஆண்டு மாசித்திருவிழா இனிதே நிறைவுபெற்றது.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!