இம்மரம் மிகவும் பழமையான மரம் என்பதால் அடிப்பகுதியிலும் மேல் பகுதிகளிலும் முற்றிலும் சேதம் அடைந்து எந்நேரமும் கீழே விழும் அபாய நிலையில் இருந்தது. இந்நிலையில் இன்று திடீரென நாவல் மரத்தின் உச்சிப் பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த நத்தம் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 100 ஆண்டுகள் பழமையான மரத்தில் தீ பற்றிய விதம் குறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.