திண்டுக்கல்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் மாலப்பட்டி அருகே பசுமை நகர், சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த, விஜயன் மகன் கார்த்திக்(41) இவர் மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் , சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறப்புக்குரிய காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி