திண்டுக்கல் மாவட்டத்தில் 80 ஊர்களுக்கும் மேல் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. தற்போது 12 ஊர்கள் மட்டுமே உள்ளது. வழக்குகள் நடைபெறுவதால் அநேக ஊர்கள் அரசு முறைப்படி தொடர்ந்து 5 ஆண்டுகள் நடத்த இயலவில்லை. இதனால் அவர்களிடம் முறையாக ஆவணம் இல்லை என அநேக ஊர்கள் அரசிதழில் இடம் பெறாததால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஏற்கனவே நடந்த அனைத்து ஊர்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த ஆவணம் செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு நல வாரியம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக வழங்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி