கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் கணபதி, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், தேவதா அனுக்ஞை ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது. நான்காம் கால யாக பூஜையைத் தொடர்ந்து யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டிருந்த புனித தீர்த்தக் கலசங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலைச் சுற்றி வந்து கோயிலின் விமானத்தை சென்றடைந்தது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் விமானத்தில் ஊற்றப்பட்டது.
அப்போது கோயிலைச் சுற்றி நின்ற பக்தர்கள் குலவையிட்டு கோவிந்தா, கோவிந்தா என பரவசத்தோடு கோஷமிட்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கும்பத்திலிருந்து பக்தர்களுக்கு புனித தீர்த்தமும் பூஜை மலர்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ராஜாக்கபட்டி கல்லுப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.