நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் செழியனின் டூவீலர் ஒர்க் ஷாப் கடையில், அவரது மகன் கிஷோர் பாண்டியன் (16) நேற்று மோட்டார் சைக்கிளை சுத்தம் செய்ய சுவிட்ச் போட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த நத்தம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.