அந்த வகையில் பில்லமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள காங்கேயம், காரிக்காளை உள்ளிட்ட காளைகளுக்கு பயிற்சிகள் ஈடுபட்டன. அதேநேரத்தில், மாடுபிடி வீரர்களாக களம் இறங்குவோரும், அந்த காளைகளை அடக்குவதற்கான பயிற்சியைப் பெறுகின்றனர். ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து வெளியேறும்போது எடுக்கும் வேகம் தான், மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் வருவதற்கு உதவும். இதற்கு மூச்சுப் பயிற்சி அவசியம். ஆகவே, 2 நாள்களுக்கு ஒருமுறை காளைகளுக்கு நீச்சல் பயிற்சியும், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி அளிக்கப்படும்.
மாடுபிடி வீரர்களை மிரட்டிச் சீறிப் பாய்ந்து செல்வதற்கும், திமிலை அடக்க வரும்போது உடலை லாவகமாகத் திருப்பிப் பாய்வதற்கும் காளைகளுக்கு மண்ணைக் குத்தும் பயிற்சி தரப்படுகிறது. ஜல்லிக்கட்டு நேரத்தில் அவற்றுக்கு அளிக்கப்படும் உணவுகள் மிகவும் முக்கியமானவை.