திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு பகுதியான லைன் தெருவில் பகுதியில் மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் தெரு நாய்களுக்கு கருத்தடை ஊசி வழங்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 19) காலை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.