தாடிக்கொம்பு ஸ்ரீசௌந்தராஜபெருமாள் கோவில் பட்டாச்சாரியார் ஜெகநாதன் தலைமையில் பட்டர்கள் யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கலத்தை எடுத்துக்கொண்டு கோவிலை வலம் வந்தனர். 10. 45 மணியளவில் பட்டாச்சாரியர்கள் புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நிறைவு செய்தனர். அதன்பின்னர் புனித நீர் கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பக்தர்கள் காத்திருந்து தீர்த்தத்தை பெற்றுக்கொண்டனர்.
கும்பாபிஷேக விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்துகொள்ள வந்தபோது கோவில் கமிட்டி தலைவர் ஸ்ரீமல்லுச்சாமி, செயலாளர் ஜாதிகவுன்டன்பட்டி மல்லையன், துணைப்பொருளாளர் ரெங்கசாமிபுரம் ராஜாமணி தலைமையில் அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களுக்கு மாலை மற்றும் பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.